புதன், 19 டிசம்பர், 2018

முள் குத்திய ரோஜா -5

மலையின் அடிவாரத்தில்.. தனிமையில் இருந்தது அந்த ஆஞ்சநேயர் கோயில்.  மரஙகள் நிறைந்த இடம். காலை இளம் வெயிலுக்கு குளு குளுவென்றிருந்தது. கூட்டமே இல்லை. ஒரு சில பேர்தான் இருந்தனர்.

பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே சென்று வழிபட்டு வந்தோம். சிறிது நேரம் நெருக்கமாக நடந்து கோயிலைச் சுற்றி பார்த்தோம். ஒரு சில இடங்களில் அமர்ந்து அங்கு கிடைத்த குளுமையை அனுபவித்தோம்.. !!

நான் நிலாவினி மீது மிகுந்த காதல் கொண்டிருந்தேன். அவளைக் கட்டி அணைத்து முத்தங்களால் குளிர வைக்கத் தவித்துக் கொண்டிருந்தேன். ஆனால் முதல் நாளே இதெல்லாம் சாத்தியமா என்கிற குழப்பமும் என் மனதை அரித்துக் கொண்டிருந்தது. !!

எது எப்படி இருந்தாலும் எனக்கு மிகவும் அழகான ஒரு காதலி கிடைத்திருக்கிறாள் என்பதே பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. அதனால் நான் அவசரப் பட்டு காரியத்தை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. !!

நான் திருமணமானவன். குடும்பஸ்தன் என்கிற பயம் அவளுக்கு நிச்சயமாக இருக்கும்.  என்னை நம்பி அவள் தகாத காதலில் ஈடுபடுவது என்பது.. அவ்வளவு எளிதானதும் அல்ல.. !!

தனியாக இருந்த ஒரு மண்டபத்தின் மேடை மீது உட்கார்ந்து கொண்டிருந்தோம். அவள் எனக்கு வலது பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். அவள் தோள் என் தோளுடன் உரசிக் கொண்டிருந்தது.. !!

'' நான் ஒண்ணு கேக்கணும் நிலா..''
'' ம்ம்.. என்னப்பா. ?'' என்று அவள் என்னை ஆர்வமாகப் பார்த்தாள்.
'' உங்கக்கா என்னை லவ் பண்ணதா சொன்னியே.. ?''
'' ம்ம் '' அவள் உதட்டில் மெலிதான புன்னகை அரும்பியது.
'' உன்கிட்ட சொன்னாளா..?''
'' ம்ம். ஆனா உங்ககிட்ட சொல்லல இல்ல.. ?''
'' ஆம்மா.. '' மெலிதான வியப்புடன் அவள் கண்களை ஆர்வமாகப் பார்த்தேன்.

'' அதுதான் அவளுக்கு முதல் காதல். அவளால அதை சாகறவரை மறக்க முடியாது.! உங்களை அவ ரொம்பவே லவ் பண்ணா..! எப்ப பேசினாலும் உங்களை பத்தியேதான் பேசுவா. ஆனா அவ லவ்வை மட்டும் உங்ககிட்ட சொல்ல முடியல அவளால.! இதுக்கு எடைல ஒரு தப்பு பண்ணி மாட்டிகிட்டா.. !!''
'' என்ன தப்பு ?''
'' உங்கள லவ் பண்றத அவ.. எங்க மாமா பொண்ணு ஒருத்திகிட்ட சொல்லிட்டா. ஆனா அவ ஒரு கோள் மூட்டி. ரெண்டு பேருக்கும் எதுக்கோ வந்த சண்டைல.. அவ நேரா வந்து எங்கப்பாகிட்டயே சொல்லிட்டா. ! பாவம் அடி பிண்ணிட்டாங்க.. எங்கப்பா.. !!''

அவள் சொன்னதை கேட்க எனக்கு வருத்தமாக இருந்தது. அவள் புன்னகை மாறாமலே மேலும் சொன்னாள்.
'' இப்ப கட்டி வச்சிருக்கற.. அவரு புருஷனை அவளுக்கு புடிக்கவே இல்ல. ! ஏதோ கடனேனு ரெண்டு குழந்தைகள பெத்து வாழ்ந்திட்டிருக்கா.. !!''

'' ஓ.. !!'' நான் நீளமாக ஒரு பெருமூச்சு விட்டேன். என் மனசு ஒரு மூலையில் உடைவதை போலிருந்தது. ''பாவம்.. உங்கக்கா..''
'' நீங்களும் அவளை விரும்பறிங்கனு.. அவளுக்கு ரொம்ப நல்லாவே தெரியும்..!!''

எனது எண்ணங்கள் பின்னோக்கிச் செல்ல ஆரம்பித்தது. நிலாவினி மீண்டும் என்னை நிகழ்வுலகத்துக்கு இழுத்து வந்தாள்.

'' நான் கூட லவ் மேரேஜ்தான் பண்ணிகிட்டேன்.. '' சன்னக் குரலில் சொன்னாள்.
''ஓ. ! உங்கப்பா எதிர்க்கலையா.. ?''
'' எதிர்க்காம இருப்பாஙகளா.. ? ஆனா..  எங்கக்கா விருப்பம் இல்லாத வாழ்க்கைதான் வாழறா.. என்னையும் அதே மாதிரி ஆக்கிறாதிங்க.. உங்க கவுரத்துக்காகனு சொல்லி அவரை கன்வின்ஸ் பண்ணி சம்மதிக்க வச்சேன்.. !!''
'' ஓஓ.. !!''
'' அப்படி ஒண்ணும் அவன் அன்னியமும் கிடையாது. எங்க ரிலேஷன்தான். ஒரு வழியா சம்மதம் வாங்கி கல்யாணம் பண்ணோம். ''
'' ம்ம் !!''
'' நல்லாதான் வாழ்ந்தோம். ஆறு மாசம்.. !!'' அவள் குரல் தணிந்தது.
'' ம்ம் '' மெல்ல அவள் கை பற்றி அழுத்தினேன்.

அவள் கண்கள் கலங்கின. அவள் கையை மெதுவாக வருடிக் கொடுத்தேன்.
'' ரிலாக்ஸ் நிலா.. ''

இடது கையால் கண்களை துடைத்தாள். துப்பட்டாவை உயர்த்தியபோது அவளின் இளமை வீக்கம் விண்ணென தெரிந்தது. என் பார்வையை மெல்ல மாற்றினேன்.

''ஒரு வருசம் கூட முழுசா வாழலை. அதுக்குள்ள விதி.. அவனை என்கிட்ட இருந்து பிரிச்சிருச்சு.. !!''
'' ஸோ ஸாரி.. !!''

மெல்லிய இளங் காற்று அவளது முன் நெற்றி முடிகளை கலைத்துப் போனது. ஆனால் அவள் கண்கள் மட்டும் கலங்கியே இருந்தன. அவள் கையை எடுத்து என் உளளங் கைக்குள் வைத்து மென்மையாக வருடிக் கொடுத்தேன். அவள் சுற்றிலும் ஒரு பார்வை பார்த்து விட்டு தலையை மெதுவாக என் பக்கம் சாய்த்தாள்.!

'' ஸாரி நிலா...''
'' பைக்ல போனவன்.. பொணமாத்தான் வீடு வந்தான்..'' என்றபோது.. அவளையும் மீறி அவளது குரல் உடைந்தது. மளுக்கென கண்களில் கண்ணீர். அவளின் கண்ணீர் உடனடியாக என் தோளை நனைத்தது.

'' நிலா.. காம் டவுன் ப்ளீஸ்.. !!'' அவள் தோளில் கை போட்டு என்னுடன் அவளை சேர்த்து அணைத்தேன்.

அவள் துப்பட்டாவை எடுத்து முகத்தை மூடிக்கொண்டு என் தோளில் சாய்ந்தபடி சிறிது நேரம் அழுதாள். நான் ஆறுதல் சொல்லி அவளை தேற்ற முயன்று கொண்டிருந்தேன்.. !!

எங்களைப் போலவே.. யாரோ இரண்டு பேர்.. நாங்கள் இருந்த இடத்திற்கு வர.. நிலா அழுகையை அடக்கிக் கொண்டாள். துப்பட்டாவால் முகத்தை துடைத்துக் கொண்டு எழுந்தாள்.

'' வாங்க போலாம்.. '' மிகவும் மெல்லிய குரலில் அழைத்தாள்.

நானும் எழுந்து அவளுடன் நடந்தேன்.
'' கஷ்டமா இருந்தா அதைப் பத்தி பேச வேண்டாம் நிலா.. ''
'' ம்ம் ''

இருவரும் கை கோர்த்து மெதுவாக நடந்தோம். எங்கள் பைக் இருந்த இடத்தை அடைந்தோம.

'' ஸாரி.. ! நான் அழுது உங்கள மூட் அப்செட் பண்ணிட்டேனா.. ?'' என்று மெல்லக் கேட்டாள்.
'' எனக்கு நோ ப்ராப்ளம்.. பட் உனக்குத்தான் கஷ்டம்.. ''
''நமக்கு புடிச்சவங்கிட்ட சொல்லி அழறதும் ஒரு சுகம்தானே.. ?''
'' எஸ்ஸ்... ''
'' தேங்க்ஸ்.. ''
'' ஐ லவ் யூ.. ''
'' மீ டூ.. ''
'' என்ன பண்ணலாம்.. ?''
'' என்ன. ?''
'' நெக்ஸ்ட்.. ? கோவில் முடிஞ்சுது.. ?''
'' நான் சினிமா பாத்து ரொம்ப நாள் ஆச்சு.. ''
'' போலாமா.. ?''
'' ம்ம். ! பட்.. உஙகளுக்கு ஒண்ணும் பிராப்ளம் இல்லையே.. இதுனால.. ?''
'' என்ன ப்ராப்ளம்.. ??''
''நாம ஜோடியா சினிமா போறதை யாராவது பாத்தா.. ?''
'' ஹா.. ! இருக்குதான். !!''
''ஸோ.. ?''
'' நம்ம ஊர் தியேட்டர் வேண்டாம்.. !''

கோவிலை விட்டு கிளம்பினோம். நிலாவினி என் பின்னால் நெருக்கமாகவே உட்கார்ந்து கொண்டாள். அவளின் மென் கலசங்கள் மென்மையாக என் முதுகில் அழுந்தி.. எனக்கு சுகமளித்தன. !! நான் ரூட் மாற்றி.. பைக்கைச் செலுத்தினேன். அவள் என் தோளில் கை வைத்துக் கொண்டாள்.. !!

'' நிலா.. ''
'' ம்ம் ?''
'' ரெண்டு பக்கமும் கால் போட்டு உக்கார்றதுல உனக்கு ஏதும் பிரச்சினையா.. ?''
'' ஹேய்.. போங்கப்பா.. ''
'' நல்லாருக்கும் நிலா..''
'' மொத நாளேவா.. ?''
'' நாம வேற லைன்லதான போறோம். பத்தாததுக்கு இது காட்டு ஏரியா வேற.. ! யாரு நம்மை பாக்க போறாங்க.. ?''
'' நான் உக்காந்துருவேன்.! என்னை கேள்வி கேக்க ஆளில்லை..! ஆனா நீங்கதான்.. மாட்டிப்பிங்க.. ''
'' அப்படி பாத்தா.. வாழ்க்கைல சின்ன சின்ன சுகங்களை எல்லாம் இழக்க வேண்டியிருக்கும் நிலா..''என்று விட்டு பைக்கை ஓரம் கட்டி நிறுத்தினேன்.

நிலாவினி பைக்கை விட்டு இறங்கினாள். நானும் ஸ்டேண்டு போட்டு இறங்கனேன்.

'' ஏன்.. ?'' என்று என்னைப் பார்த்தாள்.

நான் ரோட்டின் இரண்டு பக்கத்திலும் பார்த்தேன். சாலை வெறிச்சோடிக் கிடந்தது. சாலை ஓரத்தின் இரண்டு பக்கத்திலும் மரங்களும் வேலிகளுமாக இருந்தது. நிலா இன்னும் குழப்பம் நீங்காமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

'' ஸாரி நிலா.. '' என்று அவள் கையைப் பிடித்தேன்.
'' ஏன்.. ?''
'' நான் ரொம்ப ஏங்கிப் போயிருக்கேன்.. ''
'' புரியல.. ??''
'' உன்ன ஒரே ஒரு கிஸ் பண்ணிக்கறேனே.. ப்ளீஸ்.. '' அவள் முகத்தை நெருங்கிப் போனேன்.

சட்டென பின்னால் நகர்ந்தாள்.
'' நோ.. நிரு.. ப்ளீஸ்.. !!'' மறுத்தாள்.
'' நிலா ப்ளீஸ்...'' அவள் இன்னொரு கையையும் பிடித்தேன்.
'' இல்ல.. வேணாம்.. !'' அவள் இன்னும் பின்னால் நகர்ந்தாள்.

அவள் கைகளை விட்டேன். அவள் முன் தரையில் மண்டியிட்டேன்.
'' கெஞசிக் கேக்கறேன் நிலா.. ! என் தவிப்பை என்னால தாங்க முடியல.. !!''
'' ப்பா.. நிரு.. '' பதறி என் கையைப் பிடித்து மேலே தூக்கினாள்.
''என்னைவே தரேன்.. ! ஆனா.. இப்படி பப்ளிக்ல வேண்டாம்.. !!''
'' தேங்க்ஸ் நிலா.. ! இப்போதைக்கு ஒரு ஹக்காச்சும் குடு ப்ளீஸ்மா.. முடியல.. என்னால.. !!''

அவள் கண்கள் கலங்கி விட்டது. அப்படியே இரண்டு கைகளையும் விரித்தாள். அவளுள் அணைந்தேன். அவளின் தனங்கள் மெத்தென சுகமாய் இருந்தன.. !!

ஒரு நிமிடம் முழுதாக அப்படியே அணைத்து நின்றிருந்தோம். பின் முகம் விலகி.. அவள் முகத்தை என் கைகளில் ஏந்தினேன். அவள் நெற்றியில் முத்தம் கொடுத்தேன். கண்களை மூடினாள். அவள் இதழ்களை கவ்வினேன். விட்டுக் கொடுத்தாள். நான் என்னை மறந்து அவள் இதழ்களை சுவைக்க ஆரம்பித்தேன் ...... !!!!!